search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னையில் கொள்ளை"

    • காதர் பாட்ஷாவின் கடையில் வேலைபார்த்த ஊழியர்களான அஜிஸ், கவுதம் இருவரும் கொள்ளையர்களாக மாறி இருப்பது தெரியவந்தது.
    • இருவரும் போலீசில் பிடிபடும் முன்னரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

    சென்னை:

    பெரியமேடு லாலா குட்டி தெருவை சேர்ந்தவர் காதர் பாட்ஷா. இவர் அதேபகுதியில் லேப்டாப் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் இருந்து ரூ.76 லட்சத்து 53 ஆயிரம் பணம் கொள்ளை போனது. காதர் பாட்ஷாவின் கடையில் வேலைபார்த்த ஊழியர்களான அஜிஸ், கவுதம் இருவரும் கொள்ளையர்களாக மாறி இருப்பது தெரியவந்தது. இருவரும் போலீசில் பிடிபடும் முன்னரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளனர். காதர்பாட்ஷாவின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் காலில் தொடர்புகொண்டு பேசிய இருவரும் மிகவும் துணிச்சலாக நாங்கள் தான் பணத்தை திருடிக்கொண்டு சென்றுள்ளோம் என்று கூறியுள்ளனர்.

    இதுதொடர்பாக பெரியமேடு போலீசில் காதர் பாட்ஷா புகார் அளித்து உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்துவிட்டு தப்பிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×